இந்தியாவில் கொரோனா 4வது அலைக்கு வாய்ப்பு? மாநகராட்சியின் புதிய உத்தரவு!
உலகம் முழுவதும் கொரோனா பரவல் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. சில நாடுகளில் கொரோனாவுடன் வாழ பழகி கொண்டுள்ளனர். இந்நிலையில் மும்பையில் 4வது கொரோனா அலைக்கு வாய்ப்பு இருப்பதால் தினமும் 30,000 பேருக்கு பரிசோதனை செய்ய மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிரடி நடவடிக்கை:
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் தானே, புனே, நாசிக் ஆகிய நகரங்களில் கொரோனா தொற்று தலைதூக்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 750 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 3,740 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அதிகரிப்பை அடுத்து மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் நேற்று அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
Exams Daily Mobile App Download
பின்னர் அவர் உத்தரவு ஒன்றை பிறப்பித்து அறிக்கை வெளியிட்டார். அதில், கொரோனா 4-வது அலை வருகிற ஜூலை மாதம் ஏற்படலாம் என கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் கணித்து உள்ளனர். எனவே அவர்களது இந்த எச்சரிக்கை அறிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சமீப நாட்களாக கொரோனா அதிகரித்து வருவதை பார்க்கும் போது 4வது அலை வரும் வாய்ப்பை, மறுக்க முடியாத நிலைக்கு வந்து விட்டோம். மேலும் 4-வது அலையை தொடர்ந்து மழைக்கால நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால், சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் நிலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இந்நிலையில் மும்பையில் தற்போது 8 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – 11வது தவணை குறித்த முக்கிய அறிவிப்பு!
இதனால் பாதிப்பு விகிதம் 8 சதவீதமாக அதிகரித்து உள்ளது. எனவே கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் தொற்று பாதித்த கட்டிடங்களில் பெரிய அளவில் பரிசோதனை செய்ய வேண்டும். தினமும் 30 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். கொரோனா பரிசோதனை அறிக்கையை நோயாளிகளுக்கு ஆய்வகங்கள் நேரடியாக வழங்க கூடாது. தினமும் முதலில் பரிசோதனை அறிக்கையை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த விதிமுறையை மீறும் ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.