இந்தியாவில் 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி – அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் அதிக அளவில் பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய்க்கு தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், 9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் தடுப்பூசி:
உலகளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதில் நான்கில் ஒரு பங்கு பெண்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இந்திய பெண்கள் மத்தியில், இரண்டாவது மிக உயர்ந்த இறப்புகளுக்கு காரணமாக இந்த நோய் இருக்கிறது. உலகலாவிய நகரங்களில் இருக்கும் பெண்களை விட கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் தான் இந்த புற்றுநோய்க்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நோய்யை தடுக்க தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. மேலும் அதன் விலையும் ஒரு டோசுக்கு ரூ.4 ஆயிரம் என அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அந்த அளவிற்கு செலவு செய்து வாங்கும் அளவிற்கு நாட்டின் நிதிநிலைமை இல்லாமல் இருக்கிறது. அதனால் நமது நாட்டிலேயே ‘செர்வாவேக்’ என்ற தடுப்பூசி தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
இனி முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தரிசனத்திற்கு தனிவரிசை – தேவஸ்தானத்தின் அதிரடி நடவடிக்கை!!
Exams Daily Mobile App Download
சீரம் நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது. இந்த தடுப்பூசியை தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் 9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு செலுத்தப்பட இருப்பதாக தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் அரோரா தற்போது தெரிவித்துள்ளார்.