Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – விரைவில் வட்டி சான்றிதழ்!
அஞ்சலத்தில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டுக்கும் வட்டி சான்றிதழ் அளிக்க அஞ்சல் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சான்றிதலுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி சான்றிதழ்:
இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன் என்னவென்றால் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் சேமிப்பு திட்டங்களில் சேருபவர்களுக்கு சேமித்த தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கிராமப்புற மக்கள் அஞ்சலக திட்டங்களில் அதிகம் சேமித்து வருகின்றனர். காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள், மாதாந்திர வருமான திட்டங்கள் உங்களின் எதிர்கால சேமிப்புக்கு உத்திரவாதத்தை அளிக்கிறது. ஒவ்வொரு திட்டங்களும் தனித்தனி விதிமுறைகளையும் கால அளவையும் கொண்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
வங்கிகளை விட தற்போது அஞ்சலக திட்டங்களில் தான் அதிக வட்டி விகிதம் கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இந்த வட்டி விகிதங்களுக்கு உரிய சான்றிதழ் அளிக்க கோரி வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆண்டுதோறும் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு இந்த வட்டி சான்றிதழ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனையடுத்து கோர் பேங்கிங்கில் இணைக்கப்பட்ட போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டி சான்றிதழ் வழங்க அஞ்சல் துறை முடிவு செய்துள்ளதாக வந்துள்ளது.
BB Ultimate promo 3 | வனிதா பொருளை திருடிய ஜூலி, கேள்விகளால் தாக்கிய வனிதா!
மேலும் அஞ்சல் துறையால் வழங்கப்படும் வட்டி சான்றிதழுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்ற தகவல்களும் வந்ததுள்ளது. மேலும் வட்டி சான்றிதழ் வழங்க அஞ்சல் துறை முயற்சி எடுத்து வருவதாகவும் கூடிய விரைவில் வட்டி சான்றிதழ் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வருமான வரி செலுத்துவோர் பயன் பெறுவர். மேலும் இது குறித்த விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் அஞ்சல் நிலையத்தை தொடர்பு கொண்டு அறியலாம்.