மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஊழியர்களுக்கு வழங்குவது போலவே அகவிலைநிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இறுதியாக அறிவிக்கப்பட்ட அகவிலை உயர்வு அகவிலை நிவாரணம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும் சேரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஓய்வூதிய தொகை:
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது அகவிலை நிவாரணம் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு தற்போது 50 சதவீதமாக உள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலை நிவாரணமானது ஆயுதப்படை ஓய்வூதியம் பெறுவோர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், சிவில் ஓய்வூதியம் பெறுவோர், பாதுகாப்பு சேவை மதிப்பீடுகளில் இருந்து ஓய்வூதியம் பெறுகின்றனர். மேலும் ரயில்வே மற்றும் தற்காலிக ஓய்வூதியம் பெறுவோரும், பர்மா சிவிலியன் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்த அரசு ஓய்வூதியம் பெறுவோர் ஆகியவர்கள் பலனடைவார்கள்.
‘இந்த’ பயனாளிகளுக்கு ஊதிய உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!
ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வூதியம் பெறுவோர் பல ஓய்வூதியங்களைப் பெற்றால் டி ஆர் ஐ ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டங்கள் அப்படியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 40 ஆயிரத்து 100 பெரும் நபர்கள் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தின் காரணமாக மாதம் ரூபாய் 1604 உயர்வாக பெறுவார்கள். எனவே மாதம் ரூபாய் 20050 அவர்களுக்கு ஓய்வுதியமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.