மத்திய அரசு டெல்லி-மீரட் விரைவுச்சாலையில் ஏப்ரல் 1 முதல் சுங்கவரியை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கட்டண விவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சுங்க கட்டணம்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மூலமாக நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை சேர்ந்த சுங்கக்கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் டெல்லி-மீரட் விரைவுச்சாலையில் ஏப்ரல் 1 முதல் சுங்கவரியை உயர்த்தப்பட இருப்பதாக மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும் ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு முதல் சுங்கக்கட்டணம் 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 1 & 2 தேர்வர்களுக்கு அடித்த ஜாக்பாட் – சூப்பர் ஆஃபர்! சிறப்பான சம்பவம் உறுதி!
மேலும் வெளியான தகவலின் படி இலகுரக வாகனங்களுக்கான கட்டணத்தை NHAI 5 சதவீதம் உயர்த்தும், பெரிய வாகனங்கள் டோலில் 10 சதவீதம் உயர்த்த வாய்ப்பு இருக்கிறது. தற்போது 135 கிமீ நீளமுள்ள டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வேயில் ஒரு கிமீக்கு ₹2.19 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இனி உயர்வுக்கு பின் காருக்கு ரூ. 160 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.168 வசூலிக்கப்படும். அதே போல கனரக வாகனங்களுக்கு, இதற்கு முன், 250 ரூபாய் செலுத்தியவர்கள், ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகு, ₹262.2 செலுத்த வேண்டும்.