ஊதிய உயர்வு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஏழை மக்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது இந்தத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த திட்டத்திற்கான ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு ரூபாய் 294 ஊதியமாக வழங்கப்படுகிறது.
TNPSC குரூப் 1 & 2 தேர்வர்களுக்கு அடித்த ஜாக்பாட் – சூப்பர் ஆஃபர்! சிறப்பான சம்பவம் உறுதி!
தற்போது மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி நாள் ஒன்றுக்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது. புதுச்சேரியிலும் இதே ஊதியம் வழங்கப்படும். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருவதை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயனாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.