மத்திய அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் – வேலைவாய்ப்பு இணை இயக்குனர்!
மத்திய அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் அதிக அளவில் உள்ளதாக கோவை மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி அறிவித்து உள்ளார்.
மத்திய அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள்:
வேலைவாய்ப்பின்மை நிலையை போக்க அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பில் மூலமாக முகாம்கள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் எஸ்.எஸ்.சி., (பணியாளர் தேர்வாணையம்) சார்ந்த தேர்வுக்கான பயிற்சி வழங்கும் முகாம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இந்தியாவில் வேகமெடுக்கும் புதிய வகை டெங்கு – அறிகுறிகள் என்னென்ன? மத்திய அரசு எச்சரிக்கை!
அதில் கலந்து கொண்ட கோவை மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குனர் ஞானசேகரன் அரசு வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை வழங்கினார். முகாமில் அவர், மாணவ, மாணவியர்கள் தமிழக அரசுப்பணி சார்ந்த போட்டித் தேர்வில் மட்டுமே கலந்து கொள்பவதாகவும் அதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் அறிவித்தார். மேலும் ஏராளமான மத்திய அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ளதாகவும், அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை? உண்மை நிலவரம் இதுதான்!
மேலும் கூறிய அவர், இந்த பணியை பெற எஸ்.எஸ்.சி., எனப்படும் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகளை எழுத வேண்டும். இதில் அடிப்படை ஆங்கிலம், கணிதம், பொது அறிவு சார்ந்த வினாக்கள் தான் கேட்கப்படும். தினசரி நாளிதழில் வரும் செய்திகள், நாட்டு நடப்பை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு பாதியில் விலகும் லட்சுமி அம்மா – வேதனையும், புலம்பலும்!
வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் மத்திய அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று வருகின்றனர் என்றும், தமிழர்களுக்கு இடங்கள் புறக்கணிக்கப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.