மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) உயர்வு எப்போது?
அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாதத்தில் இது குறித்த அறிவிப்புகள் கிடைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனுடன் அவர்களின் சம்பளமும் கூடுதலாக உயர்த்தப்பட இருக்கிறது.
DA உயர்வு:
இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கங்களுக்கு மத்தியில் அரசு ஊழியர்களுக்கான கூடுதல் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை அரசாங்கம் மீண்டும் உயர்த்த வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இது குறித்த ஊடக அறிக்கையின்படி, இந்த உயர்வு அடுத்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்றும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட கூடுதல் கொடுப்பனவு உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் உயரும். பொதுவாக அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் DR ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படும். இந்த DA மற்றும் DR என்பது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தின் ஒரு பகுதியாகும். அந்த வகையில் கூடுதல் கொடுப்பனவான அகவிலைப்படி தொகையை இம்முறை 4% என்ற அளவில் அரசு ஊழியர்கள் பெற வாய்ப்புகள் இருக்கிறது.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி – முக்கிய தகவல் வெளியீடு!
இதுவரை மத்திய அரசு ஊழியர்கள் 34% என்ற அடிப்படையில் அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை 4% ஆக உயர்த்தப்பட்டால் மொத்த DA 38%ஐ எட்டும். இப்போது தொழிலாளர் அமைச்சகத்தின் தரவுகளின்படி, சுமார் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அரசின் முடிவால் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் DA தொகை உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கான வாடகை கொடுப்பனவு, பயணப்படி உள்ளிட்ட சலுகைகளும் அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகிறது.