தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி – முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் அரசு மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ராணிப்பேட்டை அரக்கோணம் தாலுகாவில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி:
தமிழகத்தில் 1 – 10ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் கடந்த 14ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்தாண்டு முதல் மாணவர்களுக்கு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் போது அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு கல்வித்தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தபட்டது. அதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் ஊரடங்கு காலத்திலும் வீட்டில் இருந்து கல்வி பயின்று வந்தனர். அதனை தொடர்ந்து இல்லம் தேடி கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தபட்டது.
இந்த திட்டத்தில் தன்னார்வலர்கள் மூலம் கிராமங்களில் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தப்பட்டது. தற்போதைய தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு 1 – 3ம் வகுப்பு மாணவர்களுக்கு வாசித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் ரீடிங் மாரத்தான்” என்கிற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக கூகுள் நிறுவனத்துடன் ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்ய எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை 1 முதல் துவக்கம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதலில் ஆங்கில புலமை பெற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது ராணிப்பேட்டை அரக்கோணம் தாலுகாவில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி பேச்சு பயிற்சி நடைபெற்றது. பள்ளி ஆங்கில ஆசிரியர் ஆங்கிலத்தில் எப்படி பேச வேண்டும், அதை மாணவர்கள் மத்தியில் எப்படி கொண்டு சென்று சேர்ப்பது என்பது குறித்து விளக்கினார்.