மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேர சேவை – மத்திய அரசு ஒப்புதல்!!

0
மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேர சேவை - மத்திய
மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேர சேவை - மத்திய
மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேர சேவை – மத்திய அரசு ஒப்புதல்!!

மதுரையில் செயல்பட்டு வரும் பன்னாட்டு விமான நிலையத்தில் 24 மணிநேர சேவையை வழங்க மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் விமான சேவைக்கான நேரம் 3 மணி 20 நிமிடங்கள் நீட்டிக்கப்பட இருக்கிறது.

விமான சேவை

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சர்வதேச விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், மதுரை விமான நிலையம் அனைத்து உள்நாட்டு சேவை மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கான பன்னாட்டு விமான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, மதுரை விமான நிலையம் மூலம் 10க்கும் மேற்பட்ட தென் மாவட்டங்களில் உள்ள பயணிகள் பயனடைந்து வருகின்றனர். ஆனால், இந்த விமான சேவை தினந்தோறும் இரவு 8.40 மணியுடன் நிறுத்தப்படுகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ் – காலவரையற்ற விடுமுறை!!

Follow our Twitter Page for More Latest News Updates

இதனால், அவசர காலங்களில் விமான பயணங்களை எதிர்நோக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேர சேவைக்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையம் பயணிகளுக்கு கூடுதலாக 3 மணி 20 நிமிடங்கள் வரையிலான சேவைகளை, அதாவது 24 மணி நேர சேவைகளை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!