மத்திய அரசின் PM கிசான் நிதியுதவி திட்டம் – பயனாளியின் பட்டியலை சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசின் PM கிசான் நிதியுதவி திட்டம் - பயனாளியின் பட்டியலை சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!
மத்திய அரசின் PM கிசான் நிதியுதவி திட்டம் - பயனாளியின் பட்டியலை சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!
மத்திய அரசின் PM கிசான் நிதியுதவி திட்டம் – பயனாளியின் பட்டியலை சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!

சமீபத்தில் மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் 11வது தவணைப் பணம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதன் பயனாளியின் நிலையை சரிபார்க்கும் வழிமுறைகளை இப்பதிவில் பார்க்கலாம். இதனுடன் நிதி உதவி கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு புகாரும் தெரிவிக்கலாம்.

PM கிசான் திட்டம்:

நாடு முழுவதும் உள்ள 10 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 11வது தவணைப் பணத்தை மே 31 அன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதாவது மோடி அரசின் எட்டாவது ஆண்டு நிறைவையொட்டி, இமாச்சலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவில் நடைபெற்ற மெகா பேரணியில் பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் 11வது தவணையை வெளியிட்டார். அன்றைய தினம் 10 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சுமார் 21,000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

Exams Daily Mobile App Download

இப்போது PM கிசானின் 11வது தவணைப் பணம் வெளியான பிறகு விவசாயிகளுக்கு ஆண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசாங்கத்திடம் இருந்து தலா 2,000 ரூபாய் கிடைக்க இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியுள்ள பயனாளிகளின் பெயர்களை மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதை சரிபார்க்க, நீங்கள் PM Kisanன் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பயன்படுத்தலாம். அந்த வகையில்,

  • முதலாவதாக www.pmkisan.gov.in இணைப்பை திறக்கவும்.
  • அதன் முகப்பு பக்கத்தில் விவசாயிகள் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • அங்கிருந்து, உங்கள் விவரங்களை வைத்து தரவு பெறு விருப்பத்தை கிளிக் செய்தால் முழு பட்டியலும் தோன்றும்.

TNPSC Group 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், தேர்வு முறை குறித்த விவரம் இதோ!

இதுவரை பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நான்கு மாத மானியம் விடுவிக்கப்பட்ட நிலையில், சில விவசாயிகளுக்கு பலன்கள் கிடைக்காமல் இருக்கலாம். இந்தச் சூழலில், பலன்களைப் பெறுவதற்கு மே 31க்கு முன் கட்டாய eKYC செயல்முறையை முடிக்க வேண்டும் என்பதை பயனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த eKYC ஐ நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்றால் PM Kisan 11வது தவணையை நீங்கள் பெறாமல் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால், eKYC செயல்முறையை முடித்து இன்னும் பணம் பெறவில்லை என்றால், இது குறித்து PM Kisan Helpdeskல் புகாரைப் பதிவு செய்யலாம்.

அந்த வகையில் வார நாட்களில் அதாவது திங்கள் மற்றும் வெள்ளிக்கு இடைப்பட்ட நாட்களில் உங்கள் புகார்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்காக [email protected] மற்றும் 011-24300606 என்ற ஹெல்ப்லைன் எண்ணை பயன்படுத்தலாம். மேலும், இந்த திட்டம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உழவர் நலப் பிரிவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். இப்போது பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ. 6,000 உதவித்தொகை கிடைக்கிறது. இது நான்கு மாத இடைவெளியில் ஆண்டுக்கு மூன்று முறை விநியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!