தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல் கூடுதல் அரிசி – மத்திய அரசு உத்தரவு!!
கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நாளை முதல் அந்த திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
இலவச அரிசி:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக மாநில அரசுகள் தங்கள் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது.
TN Job “FB Group” Join Now
நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு மே மற்றும் ஜூன் மாதத்திற்கு கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை ஆட்சியர்கள், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு உணவு வழங்கல் துறை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவு – இன்று அறிவிப்பு?
அறிக்கையில், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்னயோஜனா முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற கார்டுதாரர்களில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கூடுதல் அரசி இலவசமாக வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான அரிசி ஜூன் மாத ஒதுக்கீட்டுடனும், மே மாத அரிசி ஜூலை மாத ஒதுக்கீட்டுடனும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.