தேசிய அளவில் தமிழகம் 2வது இடம் – நிதி ஆயோக் தரவரிசை பட்டியல் வெளியீடு!
உலகம் முழுவதும் ஐநா அமைப்பின் கீழ் இயங்கும் நாடுகளில் வளர்ச்சி குறித்து தரவரிசை வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் உள்ள மாநிலங்கள் நிலையான வளர்ச்சி தொடர்பாக நிதி ஆயோக் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளது.
வளர்ச்சி பட்டியல்:
கடந்த 2018ம் ஆண்டு முதல் எஸ்டிஜி (Substainable Development Growth) நாடுகளில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சி குறித்து கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள மாநில/யூனியன் பிரதேச துறைகள், நிதி வளர்ச்சி எவ்வாறு இருக்கிறது என்பதனை அறிவதற்காக நிதி ஆயோக் இந்த கணக்கீடை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாநிலங்களிலும் சுகாதாரம், கல்வி, மருத்துவம், தனிநபர் வருமான போன்றவை எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது கணக்கீடு செய்யப்படும்.
TN Job “FB Group” Join Now
மொத்தம் 13 இலக்குகள், 39 குறியீடுகள், 62 காரணிகளை மையமாக வைத்து கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த கணக்கீட்டின் அடிப்படையில் கடந்த ஆண்டு பட்டியலில் கேரள மாநிலம் முதல் இடத்தை பிடித்தது. தற்போது அதேபோல் இந்த வருடமும் கேரள மாநிலம் 75 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் 74 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும், அதேபோல் இமாச்சல பிரதேச மாநிலமும் 74 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல் கூடுதல் அரிசி – மத்திய அரசு உத்தரவு!!
இதனை தொடர்ந்து யூனியன் பிரதேச பட்டியலில் சண்டிகர் 79 புள்ளிகளை பெற்று முதல் இடத்தையும், டெல்லி 68 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் தனிநபர் வருமானத்தில் தமிழகம் மற்றும் டெல்லி தொடர்ந்து அபார வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுகாதாரத்துறையில் டெல்லி மற்றும் குஜராத் வளர்ச்சி அடைந்து வருவதாகவும், கல்வித்துறையில் கேரளா மற்றும் சண்டிகர் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.