தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவு – இன்று அறிவிப்பு?
கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை மீண்டுமாக நடத்துவது அல்லது ரத்து செய்வது குறித்த இறுதி முடிவு இன்று (ஜூன் 4) வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
இறுதி முடிவு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகு இன்று (ஜூன் 4) முடிவு வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது. முன்னதாக கல்வி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தேர்வு குறித்த முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
TN Job “FB Group” Join Now
மத்திய அரசு CBSE மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா என குழப்பங்கள் நீடித்து வருகிறது. இதை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்தலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது குறித்து பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க அரசு முடிவு செய்தது. தேர்வுகள் குறித்த சரியான முடிவு இன்னும் எடுக்கப்படததால் மாணவர்கள் மன அழுத்தத்திலும் பதட்டத்திலும் உள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் (Twitter) பயனாளர்களுக்கு புதிய அப்டேட் – சந்தா முறை அறிவிப்பு!!
மேலும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர், தேர்வுகளை ரத்து செய்யம்படிக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளனர். அதே நேரத்தில் தேர்வுகளை நடத்துவது தற்போது சாத்தியமில்லை என்று கல்வியாளர்களும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். தேர்வுகளை ஒத்திவைப்பது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் ஆலோசித்து முடிவு எடுக்கவேண்டிய சூழலில் தமிழக அரசு உள்ளது. அதனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்த இறுதி அறிவிப்பு இன்று (ஜூன் 4) வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துகேட்பு முடிவுகளை இன்று முதல்வரிடம் சமர்ப்பித்து, ஆலோசனைக்கு பின்னர் இறுதி முடிவு வெளியிடப்படவுள்ளது.