தமிழக அரசின் பள்ளிப்பாட புத்தகங்களில் ஒன்றிய அரசு – ஐ.லியோனி தகவல்!
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக பதவியேற்றிருக்கும் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள், வரும் நாட்களில் அரசு பள்ளி பாட புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று குறிப்பிடப்பட உள்ளதாக தகவல் அளித்துள்ளார்.
ஒன்றிய அரசு
தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் பாட புத்தகங்கள் அச்சிடும் பணிகளை தமிழ்நாடு பாடநூல் கழகம் செய்து வருகிறது. அந்த வகையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்குமான பாட புத்தகங்களை இந்நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. தவிர ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள், பல்நுட்ப கல்லூரிகளுக்கு தேவையான பாட புத்தகங்களையும் தயாரித்து தமிழக அரசு நிர்ணயித்த விலைகளில் விற்பனை செய்து வருகிறது.
ஆந்திராவில் ஜூலை 14 வரை கூடுதல் தளர்வுகள் – இரவு நேர ஊரடங்கில் மாற்றம்!
இது தவிர தமிழ்நாடு பாடநூல் கழகம் சில முக்கிய நூல்களை மொழிபெயர்க்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகம் தனது பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களை அந்நிறுவனத்தின் புதிய தலைவராக முதல்வர் முக ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதை தொடர்ந்து புதிய பொறுப்புகளை ஏற்றிருக்கும் பட்டிமன்ற பேச்சாளரான லியோனி அவர்கள், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இதை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 2022 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிப்பாட புத்தகங்களில், மத்திய அரசுக்கு பதிலாக ஒன்றிய அரசு இடம் பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.