ஆந்திராவில் ஜூலை 14 வரை கூடுதல் தளர்வுகள் – இரவு நேர ஊரடங்கில் மாற்றம்!
கொரோனா புதிய பாதிப்புகள் குறைந்து வருவதை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் மேலும் சில கூடுதல் தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
ஆந்திர பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி உள்ளிட்ட 2 மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஆந்திராவின் மற்ற 11 மாவட்டங்களிலும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்தி மருத்துவ சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர் அனில் குமார் சிங்கால் உத்தரவிட்டுள்ளார்.
ஜியோ (Jio) பயனர்களுக்கு சிறப்பம்சம் – தடுப்பூசி பற்றிய விவரங்கள் வாட்ஸ்ஆப்பில் பெறலாம்!
ஆந்திர பிரதேசத்தின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளிலும் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் அலுவலகங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தவிர கொரோனா தளர்வுகள் அளிக்கப்படாத கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் தற்போது உள்ள முழு ஊரடங்கு உத்தரவு வழக்கம் போல் தொடரும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்களில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவானது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும். இந்த விதிமுறைகள் ஜூலை 14 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய (ஜூலை 7) நிலவரப்படி, ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,166 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 32,356 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.