மத்திய அரசின் தங்கப் பத்திரத் திட்டம் 2021-22 | வெளியீட்டு தேதிகள் அறிவிப்பு!
தங்கத்தின் மீதான முதலீடுகளில் ஆர்வம் செலுத்தி வரும் நபர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் தங்கப் பத்திரத் திட்டம் இந்த ஆண்டு முதல் அடுத்த ஆண்டு வரை குறிப்பிட்ட 4 தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கப் பத்திரம்
முதலீட்டு நோக்கத்தில் தங்கத்தை நகையாக அல்லது நாணயங்களாக வாங்க விரும்புபவர்களுக்காக மத்திய அரசு உருவாக்கியது தான் இந்த தங்கப் பத்திரத் திட்டம். இந்த திட்டமானது கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கீழ் பயனர் ஒருவர் தங்கத்தை பொருள் வடிவில் வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி அதற்கான பலனை பெற முடியும். வழக்கமாக தங்கப் பத்திரத்தை விற்பனை செய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில தேதிகள் ஒதுக்கப்படும்.
கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – டெபிட் கார்டை பிளாக் செய்யும் முறைகள்!
அந்த வகையில் இந்த ஆண்டுகான தங்கப் பத்திரத்தை விற்பனை செய்வது குறித்த அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை மேற்கொண்ட மத்திய அரசு தங்கப் பத்திரங்களை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 4 பகுதிகளாக வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளது.
தமிழக ஹிந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை – விசாரணை ஒத்திவைப்பு!
இந்த ஆண்டுக்கான தங்கப் பத்திர விற்பனை 2021ம் ஆண்டில் நவம்பர் 2, டிசம்பர் 7 ஆகிய தேதிகளிலும், வரும் 2022ம் ஆண்டில் ஜனவரி 18, மார்ச் 8 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தின் படி தங்கப் பத்திரங்கள் அனைத்தும் வர்த்தக வங்கிகள், தபால் அலுவலங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலம் விற்கப்பட உள்ளன. இது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் என்பதால் நம்பகத்தன்மை மிக்கதாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.