தமிழக ஹிந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை – விசாரணை ஒத்திவைப்பு!
இந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை என வெளியான அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஒத்திவைப்பு:
கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு காலிப்பணியிடங்கள் ஏதும் நிரப்பபடாதது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியானது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – ஓபிஎஸ் கோரிக்கை!
உதவி பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மை பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப அக்13 ல் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மற்ற மதத்தினர் கலந்து கொள்ள தகுதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த சுஹைல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவ்வாறு அவர் தொடுத்த மனுவில் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது, இந்திய அரசியல் சட்டப்பிரிவு 16 மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்றும், இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து விட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவானது நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பணி நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டது என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், இந்து அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டுமே நியமிக்க முடியும் என்று ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஹிந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று விதி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். நன்கு விசாரித்த நீதிபதி வழக்கு குறித்து தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.