தமிழக ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஜூன் 5 முதல் கூடுதல் அரிசி விநியோகம் – மத்திய அரசு!!
நாட்டில் மக்கள் அனைவரும் கொரோனா நோய்த்தொற்றினால் பல்வேறு துயரை சந்தித்து வரும் நிலையில் தற்போது மத்திய அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசி விநியோகிக்கப்படும் என்று அறிவித்தது.
ரேஷன் அட்டைதாரர்கள்:
தமிழகம் உட்பட அனைத்து மாநிலமும் தற்போது கொரோனா என்னும் உயிர்கொல்லி நோயில் இருந்து மக்களை காக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி மே மற்றும் ஜூன் மாதங்களில் முன்னுரிமை, அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழக்கமாக வழங்கும் அரிசியோடு கூடுதலாக கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது இதற்காக தமிழக மாவட்ட ஆட்சியர்கள், நுகர்பொருள் வணிக கழக நிர்வாக இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு உணவு வழங்கல் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் – அரசு முக்கிய உத்தரவு!
அதில் கூறியதாவது, ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ்’ அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை, முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைதாரர்களில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தலா 5 கிலோ அரிசி வீதம் மே, ஜூன் இரு மாதங்களுக்கு கூடுதல் அரிசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு மாதத்திற்கான அரிசி வருகின்ற 5ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.