தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் – அரசு முக்கிய உத்தரவு!
தமிழக ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் உணவுப்பொருட்கள் இருப்பு குறித்து கண்காணிக்க வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
உணவுப்பொருட்கள் வழங்கல்
கொரோனா பொது முடக்க காலத்தில் பொது மக்களின் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு மாநில அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவு பொருட்கள் இருப்பு குறித்து கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் அனந்த்குமார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைப்பதை மாவட்ட ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மின்தடை கிடையாது – அமைச்சர் அறிவிப்பு!!
அந்த வகையில் குறிப்பிட்ட நேரங்களில் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்க வேண்டும். பொருட்களை வாங்க வரும் மக்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிவது மற்றும் 1 மீட்டர் தூரத்துடன் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் வழங்க வேண்டும். எவ்வித காரணத்தினாலும் மக்களுக்கு பொருட்களை தராமல் திருப்பி அனுப்பக்கூடாது. மேலும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொருட்களின் இருப்பு குறித்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.