விவசாயிகளுக்கு ரூ. 8000 உதவித்தொகை? – பட்ஜெட்டில் வர போகும் அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!

0
விவசாயிகளுக்கு ரூ. 8000 உதவித்தொகை? - பட்ஜெட்டில் வர போகும் அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.1) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதில் பிஎம் கிசான் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பட்ஜெட் அப்டேட்

2024-25 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று (பிப் 1) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இது பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாம் ஆட்சி காலத்தில் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகும். அது மட்டுமில்லாமல் இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகும்.

அதனால் இந்த பட்ஜெட்டில் வருமான வரி சலுகை, ரெப்கோ வட்டி விகிதம், தொழில் வளர்ச்சி, இளைஞர் திறன் மேம்பாடு, நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி(PM Kisan) திட்டத்தின் மூலம் மத்திய அரசால் வருடத்திற்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது இந்த உதவித்தொகை ரூ. 8000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!