தமிழகத்தில் சிமெண்ட் மூட்டை விலை குறைப்பு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் சிமெண்ட் மூட்டைகளின் விலையினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் உறுதி அளித்துள்ளார்.
சிமெண்ட் மூட்டை:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கால கட்டத்தில் பல பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி அன்று கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் சிமெண்ட், ஜல்லி உள்ளிட்ட பொருட்களின் விலை கடும் உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக கட்டுமான பணி பொறியாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அதன்படி ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.370 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.150 அதிகரித்து ரூ.520 ஆக உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் விரைவில் முடிவுக்கு வரும் முழு ஊரடங்கு? அமைச்சர் வெளியிட்ட தகவல்!
இதை அடுத்து கட்டுமான பொறியாளர்கள் கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் பொருட்களின் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் தற்போது நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
TN Job “FB Group” Join Now
இதற்கு தமிழக தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் விளக்கமளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் சிமெண்ட் விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஜூன் 14ம் தேதி அன்று சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்பு தற்போது சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.460 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலையை மேலும் குறைக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.