தமிழகத்தில் விரைவில் முடிவுக்கு வரும் முழு ஊரடங்கு? அமைச்சர் வெளியிட்ட தகவல்!
தமிழகம் இன்னும் ஒரே வாரத்தில் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாறிவிடும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள தகவலால், தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கானது விரைவில் முடிவுக்கு வரலாம் என கூறப்படுகிறது.
முழு ஊரடங்கு:
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அதிகமாக பரவ துவங்கிய கொரோனா 2 ஆம் அலை பெருந்தொற்று காரணமாக மே 10 ஆம் தேதி முதல் தற்போது வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மே மாத இறுதியில் உச்சம் அடைந்த கொரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். இதை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் மூலம், தமிழகத்தில் தற்போது தினசரி பாதிப்பானது 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்தில் பிற மாநிலத்தவர்களுக்கு அரசு பணி வழங்கினால் நடவடிக்கை – அமைச்சர் அறிவிப்பு!
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஜூன் 28 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, புதிய சட்டசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் 16 ஆவது சட்டப்பேரவை கூட்டம் நேற்று (ஜூன் 21) துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற நிகழ்வின் போது அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு நடவடிக்கை என்பது சவாலானது தான். ஆனால் தற்போதைய அரசு இந்த நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனாவுக்கு பின்னர் கொடுக்கக்கூடிய சிகிச்சைக்காக மாவட்டங்கள் தோறும் மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இவரது கருத்துக்கு பதில் அளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழக முதல்வரின் விரிவான நடவடிக்கையால், கொரோனா தொற்றானது தற்போது 7 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும்’ எனவும் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்துக்களால் வரும் வாரங்களில் தமிழகத்தில் முழு ஊரடங்கு முடிவுக்கு வரலாம் என கூறப்படுகிறது.