தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா – அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கருதி அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக சென்னை மாநகர பேருந்துகளில் நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் பேட்டியளித்ததை பற்றி பார்ப்போம்.
சிசிடிவி கேமரா
தமிழகத்தில் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்துத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் அரசு பேருந்துகளில் காப்பீடு செய்வது தொடர்பாக உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கிடவும் பரிசீலனை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். அத்துடன் போக்குவரத்துத்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையம் மூலமாக மோட்டார் வாகன ஆய்வாளர்களின் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் – அமைச்சர் விளக்கம்!
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் மின்சார பேருந்துகளை இயக்க முதற்கட்ட நடவடிக்கையாக 100 பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளது. மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் சென்னை மாநகர பேருந்துகளில் முதற்கட்டமாக 200 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 2000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் தமிழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்