தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்யும் பொருட்டு தன்னார்வலர்களை கொண்டு இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இத்திட்டம் நல்லதொரு கற்றல் விளைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இல்லம் தேடி கல்வி திட்டம்:
தமிழகத்தில் கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் போது அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு கல்வித் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் ஊரடங்கு காலத்திலும் வீட்டில் இருந்து கல்வி பயின்று வந்தனர். இந்த நிலையில் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கும் நோக்கில் இல்லம் தேடி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வலர்களை கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டது.
இத்திட்டம் 2021 அக்டோபர் மாதம் கொண்டு வரப்பட்டது. ஆரம்பத்தில் 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது, பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இதில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வியை கற்பிப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் தன்னார்வலர்கள் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பள்ளி முடிந்த பிறகு வீடுகளுக்கு அருகில் வகுப்புகள் எடுப்பர். தற்போது இல்லம் தேடி கல்வி திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மேலும் 6 மாதங்களுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
RRB தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – நாளை (ஆகஸ்ட் 25) மாதிரி தேர்வு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் ‘இல்லம் தேடி கல்வி’ மையங்கள் இன்னும் தேவையா? என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், கொரோனா ஊரடங்கு காலம் மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது. தற்போது தான் இயல்பு நிலை திரும்பி வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் கற்றல் இடைவெளி சீராகும் வரை இத்திட்டம் தொடரும். மேலும் இத்திட்டம் மாணவர்களுக்கு மிகவும் அவசியமானதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்