ரூ.25,000/- ஊதியத்தில் அரசு வேலை – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்…!
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCI) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Consultant பணியிடங்கள் நிரப்ப வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவராகள் 7.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Consultant பணிக்கு என 08 இடங்கள் சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (CCI) காலியாக உள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் Diploma, ITI மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 15 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.03.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 63 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 07.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால வகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.