நாட்டிலேயே முதன்முறையாக 1000 அரசு பள்ளிகளில் CBSE பாட திட்டம் – ஆந்திரா அரசின் சூப்பர் முயற்சி!
ஆந்திரா மாநிலத்தில் உள்ள 1000 அரசு பள்ளிகளில் முதல்கட்டமாக CBSE பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அரசின் இந்த சூப்பர் முயற்சிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் எழுந்து வருகிறது.
CBSE பாடத்திட்டம்:
நாட்டில் மத்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவம், போன்ற முக்கிய படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவு தேர்வுகளில் CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகிறது. இதனால் மாநில பாடத்திட்டத்தின் படி பயிலும் மாணவர்களால் நுழைவு தேர்வுகளில் சிறப்பாக மதிப்பெண்களை பெற முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அரசு பள்ளிகளில் விரைவில் CBSE தரத்திலான பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக ஆந்திரா மாநிலத்தில் உள்ள 1000 அரசு பள்ளிகளில் முதல்கட்டமாக CBSE பாடத்திட்டம் மாதிரியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டம்மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில்,2023-2024ம் கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும், 2024-2025ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – இன்று (நவ. 7) வெளியீடு!
Exams Daily Mobile App Download
இதேபோல், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவின் 9ம் வகுப்பு CBSE பாட திட்ட மாணவர்களுக்காக Skills Infinity India Private Limited என்ற நிறுவனம் கல்வியை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி வரும் காலங்களில் மற்ற மாநில மாணவர்களுக்கும், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.