சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – கல்வி வாரியத்திடம் வலியுறுத்தல்!!
நாடு முழுவதும் தற்போது கொரோனா நோத்தொற்று மிக அதிகமான அளவில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ வழியில் பயிலும் மாணவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பொதுத்தேர்வுகள்:
கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது மீண்டும் நாட்டில் வேகமெடுத்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்களை கடைபிடிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் அவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது – அரசு திட்டவட்டம்!!
இந்நிலையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே மாதம் 4ம் தேதி பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமான அளவில் பரவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக சிபிஎஸ்இ வழியில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவுள்ள பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் மாணவர்கள் அனைவரும் கொரோனா அச்சதோடு தேர்வுகளை எழுதும் நிலை ஏற்படக் கூடாது. அதுமட்டுமின்றி கூட்டம் கூடினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் – சரிபார்க்கும் பணிகள் ஆயத்தம்!!
ஆனால் ஒரு தேர்வு மையத்தில் 100க்கும் அதிகமான மாணவர்களை வைத்து தேர்வு நடத்துவது எந்த வகையில் நியாயம் என்றும் வினவியுள்ளார். எனவே சிபிஎஸ்இ வழியில் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த தேர்வு வாரியம் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Please cancel 10 board exams