CBSE 10,12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் மத்திய கல்வி வாரியமான CBSE 2022 – 2023ம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து மாதிரி வினாத்தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
இந்தியாவில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் வைரஸ் வேகமாக பரவி வரும் இக்கட்டான சூழலில் மாணவர்களை பள்ளிக்கு வர வைத்து பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் மாணவர்களின் உயர்கல்வியை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கு மதிப்பீடு முறையிலான மதிப்பெண்களை வழங்கியது.
Exams Daily Mobile App Download
அதன் பிறகு பல்வேறு கட்ட தடுப்பு பணிகளால் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் CBSE கல்வி வாரியம் நேரடி முறையில் பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டது. அப்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை செமஸ்டர் முறை போல இரண்டு கட்டங்களாக நடத்தியது. மேலும் தேர்வில் மாணவர்களின் பாட சுமையை குறைக்கும் வகையில் 50% பாடங்களில் இருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டது.
SSC Constable தேர்வர்களின் கவனத்திற்கு – Answer key வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
நடப்பு கல்வியாண்டில் வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் 2022 – 2023 ம் கல்வியாண்டுக்கான CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பழைய முறைப்படி வரும் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேர்வின் மாதிரி வினாத்தாள் மற்றும் மதிப்பெண் கணக்கீடு முறை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.cbse.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.