CBSE மாணவர்களின் கவனத்திற்கு.. தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையினை இன்று வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வு:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஆனது 2022-2023ம் கல்வி ஆண்டில் முழு பாட திட்டத்திற்கான பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் கடந்த கல்வி ஆண்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைக்கப்பட்ட பாட திட்டத்தில் பொதுத்தேர்வுகளை இரண்டு பிரிவுகளாக நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்புகள் எப்போது டிசம்பர் மாத ஆரம்பம் முதம் மாணவர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களுக்கான சூப்பரான திட்டம் – தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
டிசம்பர் 8ம் தேதியான நேற்று 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1, 2023ம் தேதி முதல் செய்முறைத்தேர்வுகள் தொடங்க உள்ளது. CBSE, அட்டவணையுடன் பள்ளிகள் செய்முறைத்தேர்வுகளுக்கு கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மேலும், டிசம்பர் 9ம் தேதியான இன்று மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.