தூய்மை பணியாளர்களுக்கான சூப்பரான திட்டம் – தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்!!

0
தூய்மை பணியாளர்களுக்கான சூப்பரான திட்டம் - தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்!!
தூய்மை பணியாளர்களுக்கான சூப்பரான திட்டம் - தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்!!
தூய்மை பணியாளர்களுக்கான சூப்பரான திட்டம் – தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்!!

தூய்மை பணியாளர்களின் நலன் கருதி இவர்களுக்கு தேவையான பாதுகாப்புகளை உறுதி செய்தல், மேலும் அவர்கள் குழந்தைகளுக்கு முறையான கல்வியினை அளிப்பதற்கு சூப்பரான திட்டம் ஒன்றை தமிழக முதல்வர் நேற்று மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடங்கி வைத்தார்.

தூய்மை பணியாளர்கள்:

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான நலத்திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தை நேற்று மதுரை மாநகராட்சியில் உள்ள வளாகத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலமாக பாதுகாப்புகளை உறுதி செய்தல், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வியினை வழங்குவது ஆகியவை செயற்படுத்தப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இத்திட்டமானது சென்னை மாநகராட்சியில் 6 மண்டலத்திலும், மதுரை மாநகராட்சியில் 3 மண்டலத்திலும், பொள்ளாச்சி, சேரன்மாதேவி, புதுக்கோட்டை ஆகிய பேரூராட்சிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் நகராட்சிகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிரமெடுக்கும் மாண்டாஸ் புயல் – பேருந்து மற்றும் விமான சேவைகள் ரத்து – பொதுமக்கள் அவதி!

Follow our Instagram for more Latest Updates

இதையடுத்து இத்திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு உறுதி செய்தல், தூய்மைப் பணிக்கான இயந்திரங்களை இயக்க பயிற்சி அளிப்பது உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் நேற்று மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கியுள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!