ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கமாக ரூ.1000 பரிசுத்தொகை – அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!
தமிழக அரசின் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் ஆயிரம் ரொக்க பணம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் வரும் 30ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரொக்க பணம்:
தமிழகத்தில் வரவிருக்கும் 2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் அட்டைகளுக்கு அரசு சார்பாக ரூ. 1000 பரிசுத்தொகை, 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணத்தை பெறுவதற்கான டோக்கன் வரும் 30ம் தேதி முதல் 2023 ஜன.4ம் தேதி வரை வழங்கப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் ரேஷன் கடையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நாளொன்றுக்கு 200 குடும்பங்கள் வீதம் பரிசுத்தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டோக்கன் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கனில் எந்த தேதி மற்றும் நேரத்தில் பொங்கல் தொகுப்பை வந்து பெறலாம் என்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அத்துடன் ரூ.1000 பொங்கல் பரிசு தொகையானது ரொக்கமாக நேரடியாகவே ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் தங்கள் வீட்டில் இருந்து பைகளை கொண்டு வந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.