தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் முயற்சி – மஞ்சப்பை விருது அறிவிப்பு.. முதல் பரிசு ரூ. 10 லட்சம்!
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிப்பது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.
மஞ்சப்பை விருதுகள்
தமிழக மக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதாவது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் அதற்கு பதிலாக துணி மற்றும் காகித பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த மஞ்சள்பை விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மஞ்சள் பை விருது பெற விரும்பும் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து 01.05.2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பபடிவத்தில் தனிநபர் மற்றும் நிறுவன தலைவர்கள் முறையாக கையெப்பமிட்டிருக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்த விண்ணப்பம் மற்றும் குறுவட்டு பிரதிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெறுவோர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.