தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி செல்ல தடை? வழக்கு ஒத்திவைப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று குழந்தைகளுக்கு பரவும் அபாயம் இருப்பதால் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
பள்ளி செல்ல தடை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலை பாதிப்புகள் காரணமாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த 2020 மார்ச் முதல் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வாயிலாக பாடங்களை கற்பித்தது. தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பின் காரணத்தால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படவில்லை.
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.4,000 பெற இன்றே கடைசி நாள் – முழு விவரம் இதோ!
கடந்த ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு பரவி வந்தது. இதனால் உயர்வகுப்பு மாணவர்களான 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு முதல்கட்டமாக பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த பல தரப்புகளில் கோரிக்கைகள் பெறப்பட்டது. இதனால் பல ஆய்வுகளுக்கு பிறகு, முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு சார்பில் ‘வீடு தேடி பள்ளிகள்’ திட்டம் – கல்வித்துறையில் அடுத்த அதிரடி!
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாபுதீன் என்பவர் தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில், கொரோனா 3ம் அலை பரவல் குழந்தைகளை பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களை பள்ளிக்கு வர வைக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மனுதாரர் கால அவகாசம் கோரியுள்ளதால் வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.