தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் குறித்த வழக்கு – நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில் 1கிமீ சுற்றளவுக்கு அப்பால் உள்ள மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை மறுக்கப்படுவது குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவிகித இடங்களில் ஏழை எளிய மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கப்படும். அதன் பின் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்கலாம். இந்நிலையில் இந்த திட்டம் தனியார் பள்ளியில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
மே – 10ம் தேதி வரை விமான சேவை ரத்து – Go fast நிறுவனம் அறிவிப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்!
மேலும் ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இயலாத நிலை இருப்பதால் அது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அதில் ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்கும் குழந்தைகள் விண்ணப்பிக்காமல் இருந்தால், ஒரு கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் குழந்தைகளின் விண்ணப்பங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்குவது குறித்து 2017 ஆம் ஆண்டு செய்தி குறிப்பு வெளியானது குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மனு குறித்து பதிலளிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு மே மூன்றாவது வாரத்துக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.
Exams Daily Mobile App Download