தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான துணைத்தேர்வு அறிவிப்பு – முக்கிய தகவல் வெளியீடு!

0
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான துணைத்தேர்வு அறிவிப்பு - முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான துணைத்தேர்வு அறிவிப்பு - முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான துணைத்தேர்வு அறிவிப்பு – முக்கிய தகவல் வெளியீடு!

தமிழகத்தில், 2022 மே மாதத்தில் நடைபெற்ற 11ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27) வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுதிய மாணவர்கள் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை செக் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம். மேலும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு அறிவிப்பை தேர்வுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

உடனடி மறுதேர்வு:

தமிழகம் முழுவதும் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10 ஆம் தேதி தொடங்கியது. 3119 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 8,83,882 பேர் எழுதினர். இதில், மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேரும் தேர்வெழுதினர். இந்நிலையில் இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. மேலும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 90.07 % சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99 % மாணவர்கள் 84.6 % தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.inwww.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை சமர்ப்பித்து உள்நுழைந்து முடிவுகளை  பார்க்கலாம். இதையடுத்து  தாங்கள் பயின்ற பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். கூடுதலாக, மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த கைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இந்த நிலையில் மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றது. வேலூர் மாவட்டம் 80.02% தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பெற்றது. இந்நிலையில் இந்த பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு எழுதுவதற்கான அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உடனடி தேர்வுக்கு வரும் 29 முதல் ஜூலை 6 வரை அந்தந்த பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை கூறியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!