தென் மாவட்டங்களுக்கு பேருந்து கட்டணம் குறைப்பு – போக்குவரத்து துறை அறிவிப்பு!
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்து முனையம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
கட்டணம் குறைப்பு:
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பகுதியில் இதன் காரணமாக அதிக அளவிலான போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு, காத்திருப்பு நேரம் அதிகரிப்பதால் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். இதனால் தமிழக அரசு புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையத்தை வடிவமைத்து நேற்று முதல் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி இனி தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து தான் பேருந்துகள் இயக்கப்படும். அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூபாய் 20 முதல் ரூபாய் 35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு SETC பேருந்தில் அதிகபட்சமாக ரூபாய் 460 ஆக இருந்த பேருந்து கட்டணம் தற்போது கிளம்பாக்கத்தில் இருந்து ரூ.430 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
BEL நிறுவனத்தில் காத்திருக்கும் Apprentices வேலை – 115 காலியிடங்கள்!