கிள்ளி கொடுக்காம இப்படி அள்ளி கொடுக்குறாங்களே.. ஐ.டி ஊழியர்களுக்கு அடிச்ச பம்பர் லாட்டரி!
நாட்டில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் பணி விலகுவதை தவிர்க்கும் வகையில் பல அதிரடியான சலுகைகளை வழங்கி வருகின்றனர். இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஐடி ஊழியர்கள்:
நாட்டில் முன்னர் இருந்த நிலையை விட தற்போது ஐடி நிறுவனங்கள் அதிகம் அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. மேலும், ஐடி துறையில் ஊழியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஐடி ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கொடுத்து பணியமர்த்த நிறுவனங்கள் தயாராக உள்ளது. எனவே, அதிக ஊதியம் அளிக்கும் நிறுவனத்தில் பணி வாய்ப்பை அடைந்தால் பழைய நிறுவனத்தை விட்டு ஊழியர்கள் வெளியேற தயாராகி விட்டனர்.
இதனால் ஐடி நிறுவனங்கள் திறமையான ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறாமல் இருக்க தற்போது ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற சில நுட்பங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கான சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக ஒரு இன்போசிஸ் ஊழியர் மேனேஜராக 12 முதல் 13 ஆண்டுகள் ஆகும்.
Exams Daily Mobile App Download
ஆனால் இனி பிளாட்டினம் கிளப் மூலம் அதிக திறமையுள்ள ஒரு புதிய ஊழியர் 7 ஆண்டுகளில் மேலாளராக முடியும் என்று இன்போசிஸ் நிர்வாகத் துணைத் தலைவர் மற்றும் குரூப் HR தலைவர் கிரிஷ் சங்கர் அறிவித்துள்ளார். மேலும், ஊழியர்களின் பணி திறனுக்கு ஏற்ற வகையில், ஸ்கில் டேக் மற்றும் டிஜிட்டல் ஸ்கோர் அளிக்கப்படுகிறது. மேலும், புதிய திட்டத்தின் மூலம் ஒரு குழுவில் இருந்து மற்றொரு தொழில்நுட்ப குழுவிற்கு வேலையை மாற்றிக் கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்