நீங்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ளீர்களா? உயர போகும் வட்டி விகிதம்! அடித்தது ஜாக்பாட்!

0
நீங்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ளீர்களா? உயர போகும் வட்டி விகிதம்! அடித்தது ஜாக்பாட்!
நீங்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ளீர்களா? உயர போகும் வட்டி விகிதம்! அடித்தது ஜாக்பாட்!
நீங்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ளீர்களா? உயர போகும் வட்டி விகிதம்! அடித்தது ஜாக்பாட்!

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சேர மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதனால் வரும் அக்டோபர் மாதத்தில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வட்டி விகிதம் உயர்வு:

இந்தியாவில் நிலவும் பண வீக்கத்தை பொறுத்து ஆண்டுதோறும் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதி கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 புள்ளிகள் உயர்த்தியது. இதனையடுத்து மொத்த வட்டி விகிதம் 4.40% ஆக அதிகரித்தது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டு தற்போது 5.4 சதவீதமாக இருந்து வருகிறது. இந்த ரெப்போ வட்டி விகித உயர்வால் வங்கிகளில் கடன் பெற்றவர்களின் மாத EMI தொகை மற்றும் வட்டியானது உயர்கிறது.

அதே போல சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதமும் உயர்ந்து வருகிறது. இது வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளவர்களுக்கு லாபத்தை அளிக்கிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் வங்கிகளில் பிக்சட் டெபாசிட், தொடர் வைப்புத்தொகை போன்ற முதலீட்டு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டது. மேலும் பொதுத்துறை வங்கிகள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது. ஆனால் சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதங்கள் மட்டும் உயர்த்தப்படாமல் அதே நிலையில் நீடித்து வருகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் 2ம் சுற்று பொறியியல் கலந்தாய்வு – 24,163 பேருக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்த உள்ளதாக சீனியர் வங்கி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ரிசர்வ் வங்கி மீண்டும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% உயர்த்த போவதாகவும் தகவல் வந்துள்ளது. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க பணவீக்கம் அதிகரித்து தான் காணப்படுகிறது. அதனால் அண்மையில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த ரெப்போ வட்டி வீதம் உயர்வால் வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!