Budget 2023: மாத சம்பளம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – என்னென்ன தெரியுமா?
தற்போது வெளியாக இருக்கும் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. அந்த வகையில், தற்போது மாத சம்பளதாரர்களுக்கு வெளியாக இருக்கும் அறிவிப்புகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
பட்ஜெட் எதிர்பார்ப்புகள்:
நாட்டில் 2023 – 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, வருகிற பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் சம்பளவர்க்கத்தினர், வரிக் குறைப்பு மற்றும் ஸ்லாப் விகிதங்களில் குறைப்பு உள்ளிட்ட பல சலுகைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Netflix சந்தாதாரர்கள் வெளியான ஷாக்கிங் நியூஸ்.. இனி இதற்கும் கட்டணம் – ஏப்ரல் முதல் அமல்!
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் வருமான வரி விலக்கை ரூ.2.5 லட்சத்தில் இருந்து, குறைந்தபட்சமாக ரூ.5 லட்சம் வரை என உயர்த்தும் என மாத சம்பளம் பெறும் வர்க்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். இதே போல் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) கணக்கிடுவதற்கு மெட்ரோ நகரங்களின் வரையறையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகியவை மட்டுமே மெட்ரோ நகரங்களின் கீழ் உள்ளது.
இதில் பெங்களூருவை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தற்போது தனிநபருக்கான சொத்துக்களுக்கான வீட்டுக் கடனில் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு பட்ஜெட்டில் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கின்றனர். இதையடுத்து தற்போது கல்விக் கடனில் மட்டும் வட்டிக் கழிப்பதற்கான வரம்பு உள்ளது. இந்த பட்ஜெட்டில் தனிநபர் கடன்களில் தளர்வுகள் இருக்கும் என்று மாத சம்பளதாரர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.