தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் – 68 பள்ளிகள் தேர்வு!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் - 68 பள்ளிகள் தேர்வு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் - 68 பள்ளிகள் தேர்வு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் – 68 பள்ளிகள் தேர்வு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து தற்போது காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

காலை சிற்றுண்டி

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி நடப்பு ஆண்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்திற்காக அரசு ரூ. 33 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அத்துடன் இத்திட்டம் முறையாக செயற்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் மாநகராட்சி/நகராட்சி/ஊராட்சிகளில் உள்ள 26 பள்ளிகள் மற்றும் மலைப்பகுதியான தாளவாடி தாலுகாவில் 38 பள்ளிகள் என மொத்தமாக 68 பள்ளிகளில் இருக்கும் 3,455 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அதிகாரிகள் கூறியதாவது, முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு திங்கட்கிழமைகளில் உப்புமா வகை, செவ்வாய்க்கிழமைகளில் கிச்சடி வகை, புதன்கிழமைகளில் பொங்கல், வியாழக்கிழமைகளில் உப்புமா வகை, வெள்ளிக்கிழமைகளில் கிச்சடியுடன் இனிப்பும் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.

வங்கிகள் வழங்கிய கடன் விகிதம் அதிகரிப்பு? ரிசர்வ் வங்கி புதிய அறிக்கை

Exams Daily Mobile App Download

மேலும் இதற்கென அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்துள்ளது. அத்துடன் காலை சிற்றுண்டிக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும். இதையடுத்து உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து காலை சிற்றுண்டி பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பாக பள்ளி மேலாண்மை குழு உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். அதன் பின்பு தான் மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!