வங்கிகள் வழங்கிய கடன் விகிதம் அதிகரிப்பு? ரிசர்வ் வங்கி புதிய அறிக்கை!
கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு வங்கிகள் வழங்கிய கடன் விகிதம் 14.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், வங்கிகள் திரட்டிய டெபாசிட் தொகை குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி:
இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வங்கிகள் வழங்கிய கடன் குறித்தான விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு ஜூலை 29 ஆம் தேதி நிலவரப்படி வங்கிகள் வழங்கிய கடன் 14.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதாவது, கடந்தாண்டு ஜூலை மாதத்தில் வங்கிகள் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடன் ரூ.108.00 லட்சம் கோடியாக இருந்தது. அதே போல இந்த ஆண்டில் ஜூலை 29 ஆம் தேதி நிலவரப்படி வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்த கடன் ரூ.123.69 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு அதிகளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு வங்கிகள் திரட்டிய டெபாசிட் பணம் ரூ.155.49 லட்சம் கோடியாக இருந்தது.
தமிழகத்தில் அரசு கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
ஆனால், இந்த ஆண்டில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் தொகை ரூ.169.72 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 9.1 சதவீதம் அதிகமாகும். மேலும், வங்கிகள் கடன் வழங்கல் குறித்தான இறுதி அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், இது தற்காலிகமான மதிப்பீடு என்பதையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.