திருப்பதியில் செப்.27 முதல் பிரம்மோற்சவ விழா – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் செப்டம்பர் 27ம் தேதி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்த ஆலோசனை நேற்று நடைபெற்றது.
திருப்பதி:
திருப்பதியில் செப்டம்பர் 7ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அன்றைய தினம் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு தரப்பில் பட்டு வஸ்திரங்கள் அளிக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து பிரம்மோற்சவ விழா தினங்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. அந்த வகையில் அக்டோபர் 1ம் தேதி கருட சேவை, 2ம் தேதி தங்கத் தேரோட்டம், 4ம் தேதி தேர் திருவிழா, 5ம் தேதி சக்கர ஸ்தானம் என தொடர்ந்து விழாவானது அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழகம் மற்றும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து துறை சார்பில் 300 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 150 சிறப்பு பஸ்களும் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதிக்கு 30 பேருந்துகளும், வேலூரில் இருந்து சித்தூர் வழியாக 65 பேருந்துகளும் இயக்கப்படும்.
தமிழக ஆதார் & வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு – செப்.04ல் சிறப்பு முகாம்!
அதே போல திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக 10 சிறப்பு பஸ்களும், கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் வழியாக 15 பேருந்துகளும், கள்ளக்குறிச்சியில் இருந்து வேலூர் வழியாக 8 பேருந்துகளும் வேலூரில் இருந்து சித்தூர் வழியாக 26 பேருந்துகளும் திருப்பத்தூர் வேலூர் வழியாக 10 பேருந்துகளும், புதுச்சேரி காஞ்சிபுரம் வழியாக 10 பேருந்துகளும், கன்னியாகுமரி, திருச்சி, சேலம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக சிறப்பு பேருந்து என மொத்தம் 150 சிறப்பு பேருந்துகள் தமிழகத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்