தமிழக ஆதார் & வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு – செப்.04ல் சிறப்பு முகாம்!
தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான பணிகள் தொடங்கியது. இதையடுத்து தற்போது இப்பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் (செப்.4) நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்
தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான பணிகள் தொடங்கியது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 21 லட்சம் வாக்காளர்கள் அடையாள அட்டை வைத்துள்ளனர். ஆனால் இதில் 26% பேர் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதையடுத்து அனைத்து வாக்காளர்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது இப்பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து சென்னையில் வீடு வீடாக சென்று வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் சேர்க்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு 6பி படிவத்தை நிரப்பி சமர்ப்பித்தாலே போதுமானது. தற்போது சென்னையில் ஏராளமானோர் இணைக்காமல் உள்ளதால் இதனை எளிதான முறையில் மேற்கொள்ளும் வகையில் 16 தொகுதிகளில் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 16 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – Hall Ticket வெளியீடு!
இம்முகாம் (செப்.4) நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியை செய்து முடிக்காத பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணையதளம் மூலமாகவோ அல்லது வீடு வீடாக வரும் அலுவலர்கள் மூலமாகவும் 6 பி படிவம் பெற்று நிரப்பியும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். இந்த படிவத்துடன் உங்களின் ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்