சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தின் 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் கொண்டாட்டம்!
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகர் சிம்பு நடித்து நீண்ட நாட்களுக்கு பின் வெளியான மாநாடு திரைப்படம் இரண்டாவது நாள் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மாநாடு படம் வசூல்:
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. நீண்ட நாட்களுக்கு பின் சிம்புவின் படம் வெளியானதால் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்தது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் எஸ்.ஏ சந்திரசேகர், பிரேம் ஜி, கல்யாணி பிரியதர்சன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினியின் ‘அண்ணாத்த’ ரிலீஸ் காரணமாக அது தள்ளிவைக்கப்பட்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மனசா – கணவர் சஞ்சீவ் வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
பல எதிர்ப்புகளை மீறி இந்த படம் திரையங்குகளில் வெளியாகி பட்டையை கிளப்பியது. சிம்பு ரசிகர்கள் கொட்டும் மழையில் படம் பார்க்க வந்திருந்தனர். முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.8 கோடி வரை வசூலை பெற்றது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக டைம் லூப் கதையை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பல இளைஞர்களுக்கு இந்த படம் மிகவும் பிடித்துப்போனது. கதையே இந்த படத்தின் முதல் வெற்றியாக அமைந்தது.
அதன் பின் நேற்று இரண்டாவது நாளாக இருந்தாலும் தியேட்டர்கள் ஹவுஸ் புல்லாக இருந்தது. இதனால் அந்த நாளிலும் நல்ல வசூலை பெற்றது. தற்போது இரண்டாவது நாளையும் சேர்த்து படம் ரூ. 14 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூல் என்றால் உலகம் முழுவதும் சேர்த்து முதல் வார முடிவில் பெரிய அளவில் வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல தடைகளை தாண்டி வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அதிகமாகவே உள்ளது.