‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் புதுமண ஜோடி திருமணத்திற்கு பின் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் காதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன் மற்றும் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் ஷபானா இருவரும் சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், புதுமண ஜோடிகள் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
புதுமண ஜோடிகள்:
தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை நடிகைகள் காதலித்து திருமணம் செய்துள்ளனர் என பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த செய்திக்கு பிள்ளையார்ச்சுழி போட்டது ஆர்யன் ஷபானா ஜோடி. ஆர்யன் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஷபானா ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இரண்டு சீரியல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்கள்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் ஐக்கி பெர்ரி – ரசிகர்கள் அதிர்ச்சி!
இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. ஆனால் இருவரும் அது பற்றி பல மாதங்கள் பேசாமல் இருந்தனர். இந்நிலையில் ஷபானா பிறந்தநாள் அன்று இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் நிச்சயம் முடிந்துவிட்டதாக ஷபானா புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். அதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் தேதி ஆர்யன் ஷபானா திருமணம் சென்னையில் நடைபெற்றது. திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே வந்தனர்.
அதன் பின் மாலை அவர்களது வரவேற்பு நடைபெற்றது. அதில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையேடு கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற ரேஷ்மா மதன் திருமணத்தில் புதுமண ஜோடி கலந்து கொண்டனர். அதன் பின் பாண்டிசேரிக்கு இருவரும் ஹனிமூன் சென்றிருந்தனர். தற்போது இந்த அழகான புதுமண ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இருவரும் செல்பி எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகான ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.