ஊரடங்கு அமல்படுத்தினாலும் “வலிமை” வெளியாகும் – போனி கபூர் உறுதி! ரசிகர்கள் உற்சாகம்!
ஓமைக்ரான் பரவல் காரணமாய் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளில் வலிமை திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போனி கபூர் உறுதி:
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று தமிழ்நாட்டில் கால்பதித்து வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கட்டுப்பாடு விதித்து அறிவித்திருந்தது. மேலும் இதை தொடர்ந்து தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த போவதாக தகவல் வெளியான நிலையில் திரையரங்குகளில் படங்கள் வெளிவருமா என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடைகள் திறக்க தடை, இரவு நேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு! முழு விபரம் இதோ!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வெளியாகும் நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் இப்படத்தில் ட்ரைலரில் உறுதிசெய்யப்பட்டது. வலிமை திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிக்கப்பட்டு வந்தது. இத்திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கொரோனா சமயத்தில் படத்தின் அப்டேட் எதுவும் வெளிவராததால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். ரசிகர்கள் எங்கு சென்றாலும் “வலிமை அப்டேட்” என்று கேட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
தமிழகத்தில் பேருந்து பொது போக்குவரத்து பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் – அரசு அறிவிப்பு!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து படத்தின் அப்டேட்கள் வெளியாகி வந்து கொண்டு இருக்கும் சமயத்தில் படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடப்பட்டது. தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் வலிமை படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் தகுந்த கட்டுப்பாடுகளுடன் படம் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் உறுதியாக இருக்கிறார் என்று சினிமா வட்டார தரப்பில் கூறப்படுகிறது.