தமிழகத்தில் கடைகள் திறக்க தடை, இரவு நேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு! முழு விபரம் இதோ!

0
தமிழகத்தில் கடைகள் திறக்க தடை, இரவு நேர ஊரடங்கு - அரசு அறிவிப்பு! முழு விபரம் இதோ!
தமிழகத்தில் கடைகள் திறக்க தடை, இரவு நேர ஊரடங்கு - அரசு அறிவிப்பு! முழு விபரம் இதோ!
தமிழகத்தில் கடைகள் திறக்க தடை, இரவு நேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு! முழு விபரம் இதோ!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.

கடைகளில் நேர கட்டுப்பாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பேருந்து பொது போக்குவரத்து பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் – அரசு அறிவிப்பு!

அதன்படி தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சனிக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதனை தொடர்ந்து பயிற்சி நிலையங்கள் செயல்படவும், பொருட்காட்சிகள் நடத்துவதற்கும் தடை விதித்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு என்பதால் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி இல்லை. அதனால் அனைத்து வகையான கடைகளும் இரவு 10 வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பபட்டுள்ளது. ஆதலால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளிவர வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!