மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – 37 காலிப்பணியிடங்கள் || தேர்வு,நேர்காணல் இல்லை..!
Comptroller and Auditor General of India (CAG) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி Audit / Accounts Officer பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவின் மூலம், தங்கள் பதிவுகளை செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Office of the Comptroller and Auditor General of India |
பணியின் பெயர் | Audit/ Accounts Officer |
பணியிடங்கள் | 37 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CAG காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள Comptroller and Auditor General of India (CAG) நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Audit / Accounts Officer பணிக்கு என்று மொத்தமாக 37 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கியுள்ளது.
CAG தகுதி:
இப்பணிக்கு Senior Accounts Officer/ Senior Audit Officer or Assistant Accounts Officer/ Assistant Accounts Officer பணிபுரிபவர்களும் SAS தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும் அல்லது குறைந்தது 4 ஆண்டுகள் Cash, Audit, Accounts and Budget work களில் முன் அனுபவம் கொண்டவராக இருப்பது அவசியம் / Institute of Secretarial Training and Management ல் Training முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயது மிகாமல் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளது.
CAG ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு ஊதிய அளவின்படி அடிப்படை ஊதியமாக Level 10 மற்றும் Special Allowance of 20% கூடுதலாக சேர்த்து மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
CAG விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, கொடுத்துள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு 31.01.2022 அன்றுடன் கால அவகாசம் முடிவடைகிறது.