தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கருப்பட்டி விற்பனை அரசாணை வெளியீடு!
தமிழக ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் இனி தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பனைவெல்லம் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பட்டி விற்பனை:
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மிக பயனுள்ளதாக இருந்து வருகிறது. எப்போதும் மாதந்தோறும் மிக குறைந்த விலையில் ரேஷன் அட்டைதரர்களுக்கு உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா நிவாரணத் தொகையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் கருப்பட்டி விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் மாத அரசு விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் இதோ!
கடந்த ஆகஸ்ட் மாதம் வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கருப்பட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் பனை மரத்தை வெட்ட அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. கருப்பட்டி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அரசு பனை பொருட்கள் விற்பனைக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
HCL நிறுவனத்தில் ஆப் கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட நியாய விலை கடைகளில், அமுதம் அங்காடிகளில் பனைவெல்லம் விற்கப்படும். ஒரு அட்டைக்கு 100 கிராம் முதல் 1 கிலோ வரை பனைவெல்லம் வழங்கப்படும். மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் பனை வெல்லத்தை (கருப்பட்டி) மாதந்தோறும் வாங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் அவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் விருப்பத்தின் பேரில் பனைவெல்லத்தை வாங்கி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.